தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011

இந்த ஆண்டு முதல் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை, ஆண்டு நிகழ்வாக, ‘தமிழ் பாரம்பரியக் கச்சேரி’ என்ற உரைவீச்சுத் தொடரை நிகழ்த்த உள்ளது. 23 முதல் 27 டிசம்பர் வரை நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிகளின் நிரல் கீழே.

23 டிசம்பர் 2011 - எழுத்தாளர் ஜெயமோகன் - குறுந்தொகை: தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்
24 டிசம்பர் 2011 - பேராசிரியர் சா. பாலுசாமி - அருச்சுனன் தபசு: மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை
25 டிசம்பர் 2011 - ஸ்தபதி கே.பி. உமாபதி ஆசார்யா - இந்திய புனிதக் கலைப் பாரம்பரியம்
26 டிசம்பர் 2011 - முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் - கங்கைகொண்ட சோழபுரம்: வரலாறும் கலையும்
27 டிசம்பர் 2011 - நடனக் கலைஞர் ஸ்வர்ணமால்யா கணேஷ் - ரகுநாத நாயக்கரின் வாழ்க்கை - யக்ஷகானம்

அனைத்து நிகழ்வுகளும் நடக்கும் இடம்: ராகசுதா அரங்கம், மைலாப்பூர் (நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில்). 150 பேர் வரைதான் உட்கார முடியும். தினமும் காலை 10.00 முதல் 12.00 மணி வரை. அனுமதி இலவசம்.

தவறாமல் வாருங்கள். நண்பர்களுக்குச் சொல்லுங்கள்.